ஜெயலலிதா பிறந்த நாள் விழா: இராஜபாளையத்தில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை

இராஜபாளையத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா 74வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுகவினர் மலர்தூவி மரியாதை செய்தனர்.

Update: 2022-02-24 14:23 GMT

இராஜபாளையத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 74வது பிறந்த நாள் தினவிழா முன்னிட்டு நகர அதிமுக கழகம் சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.

இராஜபாளையத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா 74வது பிறந்த நாள் தினவிழா முன்னிட்டு நகர அதிமுக கழகம் சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர அதிமுக சார்பில் வடக்கு நகர செயலாளர் முருகேசன் மற்றும் தெற்கு நகர செயலாளர் பரமசிவம் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் முன்னிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 74வது பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு அம்மா உணவகம் பகுதியில் அவரது திருவுருவப் படத்திற்கு அதிமுக கட்சியினர் மலர் தூவி மரியாதை செய்தனர்.

மேலும் புரட்சித்தலைவி அம்மா புகழ் ஓங்குக 2024 இல் மீண்டும் ஆட்சி அமைப்போம் என கோஷங்கள் எழுப்பி கட்சித் தொண்டர்கள் சபதம் எடுத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் அழகுராணி, நகர மகளிர் அணி செயலாளர் ராணி மற்றும் கிளைச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News