இராஜபாளையம் அருகே மர்ம நோயால் 300 ஆடுகள் உயிரிழப்பு

இராஜபாளையம் அருகே ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியில் மர்ம நோயால் கடந்த 20 நாட்களில் 300 ஆடுகள் உயிரிழப்பு.

Update: 2021-12-23 12:06 GMT

ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியில் மர்ம நோயால் ஆடுகள் உயிரிழந்தன.

இராஜபாளையம் அருகே ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியில் மர்ம நோயால் கடந்த 20 நாட்களில் 300 ஆடுகள் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியில் 30க்கும் மேற்பட்டோர் ஆடு வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஒவ்வொருவரும் தலா 100, 200 என ஆடுகள் வளர்த்து வருகின்றனர் .

ஆடுகளுக்கு அம்மை நோய் ஏற்பட்டு மரணம். நாளுக்கு நாள் 20 முதல் 30 வரை 300 ஆடுகள் இறந்து விட்டதாக ஆடு வளர்க்கும் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கடந்த 10 நாட்களில் கோபால் என்பவருக்கு 21 ஆடுகள் பாண்டி 20 ஆடுகள் காளிமுத்து. காசி 25 ஆடுகள் முத்துராஜ் 10, கணேஷன் 21 என 300 க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளதாக தகவல் தெரி விக்கின்றனர். மருத்துவர்களை அணுகினால் சரியான சிகிச்சை அளிக்காமல் சொல்வதை கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றம்சாட்டினர்

சம்மந்தபட்ட மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சனையை தலையிட்டு இழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க கோரியும், மருத்துவர்கள் சரியான சிகிச்சை செய்ய வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News