டாஸ்மாக் மாவட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு

விழுப்புரத்தில் உள்ள டாஸ்மாக் மாவட்ட அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

Update: 2021-09-30 11:30 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில், விற்பனை செய்யும் மது பாட்டில்களுக்கு,  அதிக பணம் வசூல் செய்வதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, விழுப்புரம் -சென்னை சாலையில் உள்ள டாஸ்மாக் மாவட்ட அலுவலகத்தில், இன்று திடீர் ரெய்டு நடைபெற்றது.

விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை சேர்ந்த மெல்வின் ராஜாசிங் மற்றும் ஆய்வாளர் ஜேசுதாஸ், காவலர்கள் விஜயதாஸ், பாலமுருகன், நரசிம்ம ராவ், ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர், விழுப்புரம் டாஸ்மாக் அலுவலகத்தில், இந்த சோதனையை மேற்கொண்டனர். அப்போது, அலுவலகத்தில் கணக்கில் வராத, ரூபாய் 1 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை கைப்பற்றி எடுத்து சென்றனர்.

இதுகுறித்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்களுக்கிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News