மருத்துவ கழிவுகள் அகற்றி, மரங்களை நட்டு பூங்கா அமைக்க கலெக்டர் உத்தரவு

முண்டியம்பாக்கம் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரியில் ஓராண்டுக்கும் மேலாக அப்புறப்படுத்தப்படாமல் இருந்த மருத்துவ கழிவுகள் அகற்றம்

Update: 2021-07-24 10:26 GMT

மருத்துவ கழிவுகள் அகற்றப்படுவதை கலெக்டர் மோகன் நேரில் ஆய்வு செய்தார்

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென நேரில் சென்று ஆய்வில் செய்தார். அப்போது அங்கு மருத்துவ கழிவுகள் அகற்றப்படாமல் தொற்று நோய் பரவும் என்ற அபாயத்தை உணர்ந்து ஆட்சியர் உடனடியாக அந்த கழிவுகளை அகற்ற உத்தரவிட்டார்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக அகற்றப்படாமல் இருந்த 150 டன் மருத்துவ கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டடது இன்று பெரும்பாலும் கழிவுகள் அப்புறப்படுத்தபட்ட நிலையில் ஆட்சியர் மோகன் மீண்டும் அங்கு ஆய்வு மேற்கொண்டு அந்த இடத்தில் மரங்களை நட்டு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அப்போது மருத்துவ கல்லூரி முதல்வர் குந்தவதேவி உட்பட பலர் உடனிருந்தனா்.  

Tags:    

Similar News