ஏனாதிமங்கலம் ஊராட்சியில் தடுப்பணையில் உடைப்பு: கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே தடுப்பணையில் ஏற்பட்ட உடைப்பை கலெக்டர் மோகன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Update: 2021-10-23 10:20 GMT

தடுப்பணையை ஆய்வு செய்த கலெக்டர் மோகன்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம் ஏனாதிமங்கலம் ஊராட்சியில் தென்பெண்ணை ஆற்றில் அமைந்துள்ள பழைய தடுப்பணையில் ஏற்பட்டுள்ள உடைப்பினை மாவட்ட கலெக்டர் மோகன் இன்று (23.10.2021) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பொதுப்பணித்துறை (நீ.வ.ஆ) செயற்பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News