100 நாள் வேலை வழங்க வேண்டும்: திண்டிவனம் அருகே கிராம பெண்கள் கோரிக்கை

திண்டிவனம் அருகே பூத்தேரி கிராம பெண்கள் 100நாள் வேலை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்

Update: 2021-08-23 16:42 GMT

கலெக்டரிடம் மனு அளிக்க வந்திருந்த பூத்தேரி கிராம பெண்கள்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட பூத்தேரி கிராமத்தைச் சேர்ந்த பெண்களுக்கு  100 நாள் வேலை வழங்கப்படுவதில்லை. 

இது குறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பல ஆண்டுகளாக வேலை வழங்கப்படவில்லை. எனவே 100 நாள் வேலையை தங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுமார் 100 க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று கோரிக்கை மனு கொடுத்தனர்.

Tags:    

Similar News