திண்டிவனத்தில் வரும் 24 ஆம் தேதி வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்நாள் கூட்டம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வருகின்ற 24 ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்த்த நாள் கூட்டம் நடைபெறுகிறது

Update: 2022-08-22 06:45 GMT

திண்டிவனத்தில் வரும் 24- ஆம் தேதி விவசாய குறைதீர் முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 24-ஆம் தேதி விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடக்கிறது என சார் ஆட்சியர் அமித் தகவல் தெரிவித்துள்ளார். திண்டிவனம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வரும் 24-ஆம் தேதி காலை 11 மணிக்கு திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்தில் திண்டிவனம், மரக்காணம், செஞ்சி, மேல்மலையனுார் வட்டத்தில் உள்ள விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.  

Tags:    

Similar News