திண்டிவனம் அருகே ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி விபத்து

திண்டிவனம் அருகே வெடி விபத்தில் காயம் அடைந்தவரை ஏற்றி சென்ற 108 ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

Update: 2022-08-14 17:24 GMT

மரத்தில் மோதி ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானது.

கடலூர் மாவட்டம் ஆதிவராகநல்லூரை சேர்ந்தவர் பாலமுருகன். வெடிவிபத்தில் காயமடைந்த இவர், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் உறவினர்கள் அழைத்து சென்றனர். ஆம்புலன்சை சிதம்பரம் அடுத்த கூலாபாடியை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் ஓட்டி வந்தார்.

திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ், சாலையோர மரத்தில் மோதியதால் முன்பகுதி சேதமானது. இதில் ஆம்புலன்சில் வந்த துளசிராமன், பாலமுருகன் உறவினர் நாகவள்ளி ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

பின்னர் மாற்று ஆம்புலன்சில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News