திண்டிவனத்தில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 10 பவுன் செயின் பறிப்பு

திண்டிவனத்தில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 10 பவுன் செயின் பறித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-08-12 14:51 GMT

திண்டிவனம் அருகே கீழ்மாவிலங்கை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். அவரது மனைவி விஜயலட்சுமி. இவர்கள், மயிலம் முருகன் கோவிலுக்கு சென்று விட்டு , நேற்று இரவு, பைக்கில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

கீழ்மாவிலங்கை பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, பின்னால், மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் , விஜயலட்சுமி அணிந்திருந்த, 10 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு, தப்பினர்.

இதுகுறித்து வெள்ளி மேடு பேட்டை போலீசார், வழக்கு பதிவு செய்து ஹெல்மெட் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்

Tags:    

Similar News