செஞ்சி அருகே இளைஞரிடன் நகை பணம் பறிப்பு: போலீசார் விசாரணை

Robbery News -விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஆலம்பூண்டி ஏரிக்கரையில் இளைஞரிடம் நகை பணம் பறித்துக் கொண்டு தலைமறைவான மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-09-10 03:34 GMT

பைல் படம்.

Robbery News -திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே உள்ள தானிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் மகன் தீனதயாளன்(வயது 21).

இவர் செஞ்சியில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் செஞ்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். ஆலம்பூண்டி ஏரிக்கரை அருகே வந்துகொண்டிருந்தபோது இயற்கை உபாதை கழிப்பதற்காக மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்தினார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் தீனதயாளனை மிரட்டி அவர் அணிந்திருந்த ஒரு பவுன் சங்கிலி, செல்போன் மற்றும் ரூ.200 பணம் ஆகியவற்றை பறித்து சென்றார்.

இதுகுறித்த புகாரின்பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News