திருவள்ளூர் மாவட்டத்தில் 1,01,213 பேருக்கு தடுப்பூசி

திருவள்ளூர் மாவட்டத்தில் 1,01,213 பேருக்கு நேற்று நடந்த சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-09-13 06:22 GMT

பைல் படம்

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இதில் முதல் டோஸ் தடுப்பூசியை 77,213 பேர் செலுத்திக் கொண்டனர். 2வது டோஸ் தடுப்பூசியை 24,000பேர் செலுத்திக் கொண்டனர்.

இதன் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த கொரோனா சிறப்பு முகாமில் 1 லட்சத்து, ஆயிரத்து 213 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

Tags:    

Similar News