வாணியம்பாடியில் காதலியை கத்தியால் குத்திவிட்டு காதலன் தற்கொலை

வாணியம்பாடியில் காதலித்து வந்த பெண்ணை சரமாரியாக  கத்தியால் குத்திவிட்டு காதலன் தூக்கிட்டு தற்கொலை

Update: 2021-06-13 13:24 GMT

வாணியம்பாடி அடுத்த மில்லத் நகர் பகுதியை சேர்ந்தவர்  சசி என்கிற சரத்குமார் (வயது 25)  இவர் ஓசூர் பகுதியில் தனியார் மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள்  தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார்.

இவர்அதே பகுதியை சேர்ந்த கோமதி (வயது 18) என்ற பெண்ணை சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் திடீரென நேற்று இரவு கோமதியை பேச அழைத்த சசி திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கோமதியை சரமாரியாக கழுத்துப்பகுதியில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கோமதியை அப்பகுதி மக்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக மேல் சிகிச்சைக்காக கோமதியை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சம்பவம் குறித்து  வாணியம்பாடி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்

அப்போது கோமதியை குத்தி விட்டு தப்பி ஓடிய சசி என்கிற சரத்குமாரை போலீசார் தேடிவந்தனர். ஆனால் காதலித்த பெண் உயிரிழந்து இருப்பார் என்று எண்ணி  சசி தூக்கில் தொங்கினார்.  உடனடியாக போலீசார் சசி உடலை  கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News