நாட்றம்பள்ளி அருகே மருமகள் படுகொலை: மாமனார் கைது

நாட்றம்பள்ளி அருகே மருமகளை வெட்டிப் படுகொலை செய்த மாமனாரை கைது செய்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை

Update: 2021-12-01 12:45 GMT

மருமகளை கொலை செய்த மாமனார் மணி

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி  தாலுகா  ஜங்களாபுரம் பகுதியை சேர்ந்தவர்  மணி என்பவருடைய மகன் சிவன். இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். 

இவரது மனைவி முருகம்மாள் அரசுப் பள்ளி ஆசிரியராக உள்ளார். கணவன்-மனைவிக்கு இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். 

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கணவன் வீட்டுக்கு வந்துள்ளார். அதன் பின்  அங்கேயே தங்கி இருந்துள்ளார்.  வந்த நாள் முதல், மாமனாருக்கும் மருமகளுக்கும் இடையே தகராறு நடந்து வந்துள்ளது.

நேற்று இரவு மீண்டும்  மருமகளுக்கும் மாமனாருக்கும் இடையே  தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை  ஆத்திரமடைந்த மாமனார் மணி, முருகம்மாளின்  தலையில் சரமாரியாக வெட்டி அங்கு இருந்து  தப்பி ஓடிவிட்டார். பின்னர் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்

இதுகுறித்து தகவலறிந்த நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகம்மாளின்  உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News