திருச்சி மருத்துவமனைக்கு 160 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை அமைச்சர் கே.என்,நேரு வழங்கல்

திருச்சி அரசு மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் சார்பில் ரூ 1.64 கோடி மதிப்பில் 160 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

Update: 2021-05-28 05:33 GMT

திருச்சி அரசு மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் சார்பில் அமைச்சர் கே.என்.நேரு 160 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்கினார்.

ரோட்டரி கிளப் சார்பாக  திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு 1.40 கோடி மதிப்பிலான 160 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை  நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் ரோட்டரி  வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன்    மாவட்ட கலெக்டர் சிவராசு, டீன் வனிதா, எம்எல்ஏக்கள் பழனியாண்டி, இனிகோ இருதயராஜ், அப்துல் சமது, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், திமுக மாவட்டபொறுப்பாளர் வைரமணி மாநகர செயலாளர் அன்பழகன்  கலந்துகொண்டு கொண்டனர்.

Tags:    

Similar News