முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனைத்திந்திய சித்த மருத்துவர் சங்கம் நன்றி

சித்த மருத்துவத்திற்கு முக்கியத்துவம் வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு சித்த மருத்துவர்கள் சங்கம் நன்றி தெரிவித்து உள்ளது.

Update: 2021-10-01 11:30 GMT

திருச்சியில் நடந்த அனைத்திந்திய சித்த மருத்துவர்கள் சங்க கூட்டத்தில்  அதன் தலைவர் சுப்பையா பாண்டியன் பேசினார்.

அனைத்திந்திய சித்த மருத்துவர் சங்க ஆலோசனை கூட்டம் திருச்சி அருண் ஓட்டலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமை தாங்கினார்.டாக்டர் பா.ஜான்ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் டாக்டர்கள் குருசாமி, கணேசன், வெங்கடேசன்,சரோஜா, இருதயமேரி,ஜமில், கவின், செல்வின், துளசி பாலகுமரன், யாசிர் ராஜா, ஆனந்த், சார்லஸ், மகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர் .

சித்த மருத்துவத்திற்கு முக்கியத்துவம்வழங்கி தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதாக அறிவித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது,தமிழகத்தில்  அக்கு பஞ்சர் சிகிச்சை முறைக்கு  அரசு அங்கீகாரம் வழங்கியமைக்கு நன்றி தெரிவிப்பது.சித்தமருத்துவ நல வாரியத்தை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News