திருச்சியில் அடைக்கலராஜ் சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவிப்பு

திருச்சியில் அடைக்கலராஜ் சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Update: 2021-09-27 12:15 GMT

நினைவு நாளையொட்டி திருச்சியில் அடைக்கலராஜ் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

திருச்சி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த துணைத் தலைவருமான மறைந்த எல். அடைக்கலராஜின் 9-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் காமராஜ் பேரவை குமார், மாவட்ட துணைத்தலைவர் மலைக்கோட்டை முரளி, சேவா தளம் அப்துல்குத்தூஸ், மாவட்ட பொதுச் செயலாளர்கள் அண்ணா சிலை விக்டர், பஜார் மைதீன், தென்னூர் மெய்யநாதன்,  முருகையா, ஐ.என்.டி.யு.சி ரயில் சரவணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News