திருச்சி: ஊரக உள்ளாட்சி தேர்தலில் 24 பதவிகளுக்கு 74 பேர் போட்டி

திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் 24 பதவிகளுக்கு 74 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.

Update: 2021-09-22 16:36 GMT

திருச்சி மாவட்டத்தில் 2 ஊராட்சி தலைவர் பதவிக்கும், 3 ஊராட்சி ஒன்றிய வார்டு குழு உறுப்பினர் பதவிக்கும், 19 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் என மொத்தம் 24 ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளுக்கு அக்டோபர் 9-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளாகும். நேற்றுவரை இந்த 24 பதவிகளுக்கும் 50 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இறுதி நாளான இன்று வேட்புமனுத்தாக்கல் கடும் விறு விறுப்பு ஏற்பட்டது.

துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் வார்டு எண் 13, வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 6-வது வார்டு, மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்தில் 10-வது வார்டு க்கும் நடைபெறவுள்ள தேர்தலில் அரசியல் கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இன்று மட்டும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 27 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஊராட்சி தலைவர் பதவிக்கு 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 19 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆக மொத்தம் மாவட்டத்தில் காலியாக உள்ள 24 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு 74 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News