திருச்சியில் குழந்தையுடன் இளம்பெண் மாயம்-போலீஸ் விசாரணை.

திருச்சியில் குழந்தையுடன் பெண் மாயமானது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-09-29 14:15 GMT

திருச்சி வரகனேரி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து மனைவி பொன்னி (வயது 30). இவர்களுக்கு குகன் என்ற 4 வயது ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று 4 வயது குழந்தையுடன் வீட்டைவிட்டு வெளியே சென்ற பொன்னி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாரிமுத்து அவரது உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் பொன்னி கிடைக்கவில்லை.

இது குறித்து பொன்னியின் தாய் செல்வ வள்ளி என்பவர் திருச்சி காந்தி மார்க்கெட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சுகுமாறன் வழக்கு பதிவு செய்து குழந்தையுடன் மாயமான பொன்னியை யாராவது கடத்தி சென்றார்களா? அல்லது வேறு ஏதும் குடும்ப பிரச்சனை உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதேபோல திருச்சி கோட்டை பகுதியிலுள்ள பாபு ரோடு முத்தழகு பிள்ளை தெருவை சேர்ந்தவர் நரேந்திரன் (வயது 32). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பல்வேறு இடங்களில் தேடியும் நரேந்திரன் கிடைக்காததால் அவரது பெற்றோர் இதுகுறித்து கோட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்கு பதிவு செய்து மாயமான நரேந்திரனை தேடி வருகின்றார்.

Tags:    

Similar News