திருச்சியில் சித்தா கொரோனா புத்துணர்வு மையத்தை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

திருச்சி சித்தா கொரோனா, புத்துணர்வு மையத்தை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2021-06-05 12:02 GMT

திருச்சி சித்தா கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர்  கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் கலெக்டர் சிவராசு, எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

திருச்சிமாவட்டம் காஜாமலை பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அரசு சித்தா கொரோனா புத்துணர்வு மையத்தை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News