திருச்சி மாவட்டத்தில் 987 பேருக்கு கொரோனா, 21 பேர் பலி

திருச்சி மாவட்டத்தில் புதிதாக 987 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சிகிச்சை பலன் இன்றி 21 பேர் இறந்தனர்.

Update: 2021-06-01 17:45 GMT

பைல் படம்

தமிழகத்தில் கொரோனா  அதி தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும் மக்கள் அலட்சியம் காட்டி வருவதால் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின்  எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. திருச்சியில் இன்று மட்டும் 987 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று 21 கொரோனாவிற்கு சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர்.

Tags:    

Similar News