திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக கார்த்திகேயன் பொறுப்பேற்பு

திருச்சி மாநகர புதிய போலீஸ் கமிஷனராக கார்த்திகேயன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Update: 2021-09-25 10:00 GMT

திருச்சி காவல் ஆணையர் கார்த்திகேயன் 

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த அருண், சென்னைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, திருச்சி மாநகர புதிய  போலீஸ் கமிஷனராக  கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். இன்று காலை, அவர் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் உறுப்பினர் செயலாளராக இருந்த அவர், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டதை அடுத்து, இன்று காலை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெற்றுக்கொண்டார். அவருக்கு அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News