சமூகநீதி நாளையொட்டி திருச்சியில் போலீசார் உறுதி மொழி ஏற்பு

பெரியார் பிறந்த நாளையொட்டி திருச்சியில் போலீசார் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றனர்.

Update: 2021-09-17 06:30 GMT

திருச்சியில் போலீசார் சமூக நீதி நாளையொட்டி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தந்தை பெரியாரின் 143- வது பிறந்த  நாள்  சமூகநீதி நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி தலைமை தாங்கினார். இதில் போலீசாரும், அலுவலக பணியாளர்களும் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த உறுதிமொழி கூட்டத்தில் சமூகத்திற்கு பெரியார் செய்த தொண்டு குறித்து போலீசார் மத்தியில் எஸ்.பி, மூர்த்தி பேசினார். நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பால்வண்ணநாதன், சுப்பிரமணியன்,  மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News