பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சியில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-05-08 05:06 GMT

திருச்சியில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி கே.கே நகர் அருகே ஐயப்பன் நகர் கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் இளையராஜா. இவர் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

இவரதுமனைவி கீதா ( 43 ) . இவர் திருச்சி மாநகர ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். 2 மகன்கள் உள்ளனர் . கடந்த சில நாட்களாக கீதா மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு தனது வீட்டின் கார் நிறுத்துமிடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த கேகே நகர் காவல் துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News