வல்லுனர்களின் ஆலோசனை பெற்ற பின்பு தான் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு

ஐ.சி.எம்.ஆர், மருத்துவ வல்லுனர்கள், பெற்றோர் கருத்து ஆகியவற்றை பெற்று பின்பு தான் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு: பள்ளி கல்வி துறை அமைச்சர்

Update: 2021-06-27 04:33 GMT

அர்ச்சகர்களுக்கு கொரோனா நிவாரண நிதியை  அமைச்சர்  வழங்கிய போது எடுத்த படம்.

ஐ.சி.எம்.ஆரின் வழிக்காட்டல்கள்,மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைகள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்கள் ஆகியவற்றை பெற்று, முதலமைச்சரிடம் ஆலோசனை செய்து அதன் பின்பு தான் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் கூறியுள்ளார்

இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் மாத சம்பளம் இன்றி பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கொரோனா கால நிவாரண உதவியாக ரூபாய் நான்காயிரம், 10 கிலோ அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு நிவாரண உதவிகளை அர்ச்சகர்களுக்கு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக வழிக்காட்டல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மதிப்பெண்கள் வழங்கப்படும்.

கொரோனா தாக்கம் தற்போது குறைந்து வருகிறது. மூன்றாவது அலை வரும் என சிலர் கூறுகிறார்கள்.எனவே ஐ.சி.எம்.ஆரின் வழிக்காட்டல்கள்,மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைகள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்கள் ஆகியவற்றை பெற்று முதலமைச்சரிடம் ஆலோசனை செய்து அதன் பின்பு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி கிழக்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News