திருச்சியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு: அமைச்சர் பங்கேற்பு

கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.

Update: 2021-10-02 12:30 GMT

திருச்சி மேலபுலிவார்டு ரோட்டில் உள்ள தேவர் ஹாலில் இன்று காலை கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி மேலபுலிவார்டு ரோட்டில் உள்ள தேவர் ஹாலில் இன்று காலை கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மங்கலப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.

மேலும் இதில் 66 பயனாளிகளுக்கு ரூ.24 இலட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு துறைகளின் கீழ் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இதில் மாவட்ட கலெக்டர் சு.சிவராசு, திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News