திருச்சி அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி அருகே நவல் பட்டில் திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-01-20 11:24 GMT

திருச்சியை அடுத்த நவல்பட்டு பர்மா காலனி பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (வயது 31). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இந்நிலையில் அவர் தனது வீட்டில் நேற்று யாரும் இல்லாத நேரத்தில்  சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News