திருச்சியில் சித்தி வீட்டில் வளர்ந்து வந்த இளம்பெண் திடீர் மாயம்

திருச்சி கோட்டை பகுதியில் சித்தி வீட்டில் வளர்ந்து வந்த இளம் பெண் திடீர் மாயமானது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

Update: 2021-10-12 16:15 GMT

திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள செல்ல கிருஷ்ணா ரெசிடென்சியில் வசித்து வருபவர் சந்தோஷ் மனைவி பத்மினி (வயது 38) இவர் இன்று கோட்டை போலீசில்  ஒரு புகார்  கொடுத்தார்.

அதில் எனது அக்காள் மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் அவரது மகள் கீர்த்தனாபாயை (வயது 21). எனது மகள் போல் எண்ணி வளர்த்து வந்தேன். திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.சி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து, படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார்.

இந்நிலையில்  நேற்று இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த கீர்த்தனா பாயை இன்று அதிகாலை எழுந்து பார்த்தபோது காணவில்லை. அவருடைய சான்றிதழ்களையும், ஏ.டி.எம். கார்டையும் எடுத்துக்கொண்டு சென்று விட்டார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை அதனால் மாயமான எனது அக்கா மகள் கீர்த்தனாபாயை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என கூறப்பட்டு இருந்தது.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News