திருச்சியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை- போலீசார் விசாரணை

திருச்சியில் இளம் பெண் தூக்கு மாட்டி தற்கொலை. காரணம் என்ன? போலீசார் விசாரணை.

Update: 2021-12-18 04:30 GMT

திருச்சி மேலசிந்தாமணி நடுத்தெருவை சேர்ந்தவர் ராஜா. சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு டீக்கடையில் ஸ்வீட் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தாமரை வள்ளி (வயது 35). இவர் வாணப்பட்டறை தெருவில் உள்ள ஒரு கடையில் டைலரிங் வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

நேற்று உடல்நிலை சரியில்லாததால்,  வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்தவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலின் பேரில்,  கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று,  தற்கொலை செய்து கொண்ட தாமரை வள்ளியின் உடலை கைப்பற்றி,  பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அவரது இறப்பு, குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News