திருச்சியில் கடன் தொல்லையால் பெண் தற்கொலை

திருச்சியில் கடன் தொல்லையால் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-11-13 03:45 GMT

திருச்சி சண்முகாநகர் கிழக்கு விஸ்தரிப்பு 5-ஆவது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவர் சென்னையில் ஜேசிபி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி (வயது 36). இவர் மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கியிருந்துள்ளார். அந்த கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.

இதற்கிடையில் அவரது கணவர் சங்கர் தீபாவளி முடிந்து சென்னைக்கு சென்றார். அங்கு சென்ற பிறகும்,  பணம் அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மகாலட்சுமி, வீட்டில் மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புகாரின் பேரில்,  திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News