குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் காதல் கணவர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சியில் குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் காதல் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-01-19 06:59 GMT

கோட்டை போலீஸ் நிலையம் (பைல் படம்).

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் முருகேசன் (வயது 32). பெயின்டரான இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மோகனப்பிரியா (27) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இவர்கள் மலைக்கோட்டை பகுதியில் உள்ள ஆண்டாள்வீதி கறிக்கடை சந்தில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். குடிப்பழக்கம் உடைய இவர், அடிக்கடி போதையில் வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மது குடித்து விட்டு வந்த முருகேசனிடம், ஏன் தினமும் மது குடித்து விட்டு தகராறு செய்கிறாய் என்று அவரது மனைவி மோகனப்பிரியா கண்டித்துள்ளார். இது போல் தினமும் குடித்துவிட்டு வந்தால் குழந்தைகளுடன் எங்கேயாவது சென்று விடுவேன் என கூறி கண்டித்தார்.

இதனால் மனமுடைந்த முருகேசன், இரவு வீட்டின் ஜன்னலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலின் பேரில் கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முருகேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மனைவி மோகனப்பிரியா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News