திருச்சியில் கணவனை அரிவாள் மனையில் வெட்டிய மனைவி கைது

திருச்சியில், கணவனை அரிவாள் மனையில் வெட்டிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-25 12:30 GMT

பைல் படம்.

திருச்சி காந்தி மார்க்கெட் தாரா நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 25). இவரின் மனைவி அழகுமணி (வயது 25). சதீஷ்குமார் காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இதன் காரணமாக அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வந்துள்ளார். இதற்கிடையே அவ்வப்போது போதையில் வீட்டிற்கு வருவதால் கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றும் குடிபோதையில் வீட்டுக்கு வந்தவர் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி அழகுமணி, அருவாள்மனையால் கணவரை வெட்டியுள்ளார்.

இதில் காயமடைந்த சதீஷ்குமார் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகுமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News