திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மழையால் பாதித்த மக்களுக்கு நலத்திட்ட உதவிளை மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.

Update: 2021-11-13 04:30 GMT

திருச்சி மாநகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகர அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிவாரண உதவிகளை வழங்கினார்.

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான  வெல்லமண்டி என்.நடராஜன், திருச்சி மாநகர் மாவட்டத்தின் ஜங்சன் பகுதியில் உள்ள 53-ஆவது வார்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

மேலும் பொது மக்களுக்கு திருச்சி மாநகர் மாவட்ட கலைப் பிரிவு செயலாளர்  அழகரசன் விஜய், ஏற்பாடு செய்து இருந்த நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர் இளைஞரணி மாநில இணைச் செயலாளர் ஜெ.சீனிவாசன். மாநகர் மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் வி.பத்மநாதன், மாநகர் மாவட்ட மீனவரணி செயலாளர் தென்னூர் கே.அப்பாஸ், மாநகர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜெ.இலியாஸ், முரளி, விக்னேஸ்வரன், மற்றும் சாய்ராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News