வ.உ.சி. சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவிப்பு

திருச்சியில், வ.உ.சி, நினைவு நாளையொட்டி வ.உ.சி, சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Update: 2021-11-18 17:02 GMT

திருச்சியில் வ.உ.சி. சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்தார்.

சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி, யின் 85-வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகில் அமைந்துள்ள வ.உ.சி. சிலைக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், கோவிந்தராஜன் , பகுதி செயலாளர்கள் மதிவாணன், மணிவேல்,  மோகன் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கிளை கழக நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News