திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல்

திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-01-24 10:57 GMT

துபாயில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று வந்த விமானத்தில் இருந்து இறங்கிய  பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ஒரு பயணி கொண்டு வந்த உடைமையில் 5 ஆயிரம் அமெரிக்க டாலர்களும், 50 ஆயிரம் சவுதி அரேபியா ரியால் கரன்சியும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.13 லட்சம் இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News