திருச்சி மண்டல தனிப்பரிவு போலீசார் அதிரடி மாற்றம் : ஐஜீ பாலகிருஷ்ணன் திடீர் நடவடிக்கை

திருச்சி மண்டலத்தில் உள்ள தனிப்பிரிவு போலீசார் அனைவரும் அதிரடியாக இடமாற்றம் செய்து ஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

Update: 2021-11-11 05:00 GMT

திருச்சி மண்டல ஐஜி பாலகிருஷ்ணன்.

ஒவ்வொரு மாவட்ட போலீஸ் எஸ்பியின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கிவரும் தனிப்பிரிவை சேர்ந்தபோலீசார், ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒருவர் என நியமிக்கப்பட்டுவார்கள்.

இவர்கள் அந்தந்த போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் நடைபெறும் முக்கிய சம்பவங்கள் குறித்து எஸ்பியின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்வர். இந்த எஸ்பியின் தனிப்பிரிவை கவனிக்க ஒரு இன்ஸ்பெக்டர் இருப்பார். மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட ௯ மாவட்டங்களிலும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றும் தனிப்பிரிவு போலீசார் 5 ஆண்டுக்கு மேலாக பணியாற்றி வருவதாக ஐஜி பாலகிருஷ்ணனுக்கு தெரியவந்தது.

இதனையடுத்து திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய ௯ மாவட்டங்களிலும் தனிப்பிரிவு போலீசார் ஒட்டுமொத்தமாக பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டார்.

இதன் அடிப்படையில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 30 போலீஸ் ஸ்டேஷன்களில் ௨௧ ஸ்டேஷன்களின் தனிப்பிரிவு போலீசாரை மாற்றி எஸ்.பி, மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். சம்மந்தப்பட்ட 21 பேரும் ஸ்டேஷன்களுக்கு செல்லுமாறும் புதியதாக 21 பேர் தனிப்பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News