திருச்சி உறையூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா

திருச்சி உறையூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

Update: 2024-03-15 17:11 GMT

திருச்சி உறையூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உறையூர் கிழக்கில் பள்ளி ஆண்டு விழா திருச்சி நகர வட்டார கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணி தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி மாநகராட்சி  23வது வார்டு மாமன்ற உறுப்பினர் க. சுரேஷ்குமார் பங்கேற்று போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.

வட்டார கல்வி அலுவலர் அர்ஜுன், வட்டார வளாக மேற்பார்வையாளர் மல்லிகா பெரியநாயகி, இயன்முறை மருத்துவர் தெய்வகுமார் சிறப்பாசிரியர் சகுந்தலா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

பள்ளி மேலாண்மை குழு தலைவி கல்பனா தேவி முன்னிலை வகித்தார்.பொறுப்பு தலைமை ஆசிரியை செசிலிவரவேற்று பேசினார்.ஆசிரியை அமுதா நன்றி கூறினார்.

விழாவில் மாணவ மாணவிகளின் பெற்றோர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாமன்ற உறுப்பினர் சுரேஷ் பரிசு வழங்கி வாழ்த்தி பேசினார். அரசு பள்ளிகளில் மாணவர்  சேர்க்கையின் முக்கியத்துவம் பற்றி அப்போது எடுத்துரைத்தார்.

Tags:    

Similar News