எஸ்.எஸ்.ஐ. கொலை குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சி நவல்பட்டு போலீஸ் எஸ்.எஸ்.ஐ.யை கொலை செய்த குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2021-11-26 11:22 GMT

திருச்சி எஸ்.எஸ்.ஐ. கொலை குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சி நவல்பட்டு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதனை படுகொலையை செய்தவர்களை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு கடுமையான   தண்டனை வழங்க கோரியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதன்  தலைவர் பொன்.முருகேசன் தலைமை தாங்கினார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News