திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின உறுதி மொழி ஏற்பு

திருச்சி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-01-25 11:38 GMT

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி. சுஜீத் குமார்  தலைமையில் தேசிய வாக்காளர் தின உறுதி மொழி ஏற்கப்பட்டது.

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அலுவலகத்தில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய குடிமக்களாகிய நாங்கள், ஜனநாயகத்தின் மீது உறுதியான,நம்பிக்கைகொண்ட நம்நாட்டின் ஜனநாயக மரபுகளையும்,சுதந்திரமான,நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் கண்ணியத்தையும் நிலைநிறுத்துவோம் என்றும், ஒவ்வொரு தேர்தலிலும் எவ்வித அச்சமுமின்றிமதம், இனம், ஜாதி, சமூக தாக்கமின்றி. அல்லது வேறு ஏதேனு ம்தூண்டுதல் இன்றியும் வாக்களிப்போம் என்றும் இதனால் உறுதி அளிக்கிறோம் என்று ,வாக்காளர்தின உறுதிமொழியினை எஸ்.பி. சுஜீத்குமார் வாசிக்க அனைத்து  அலுவலக போலீசாரும்,அலுவலர்களும்   அதனை அப்படியே  திரும்ப படித்து உறுதி மொழியினை ஏற்றுக்கொண்டனர்.

Tags:    

Similar News