முதல் அமைச்சர் பதக்கம் பெற்றவர்களுக்கு திருச்சி போலீஸ் கமிஷனர் பாராட்டு
முதல் அமைச்சர் பதக்கம் பெற்ற திருச்சி மாநகர போலீசாருக்கு திருச்சி போலீஸ் கமிஷனர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.;
முதல் அமைச்சர் பதக்கம் பெற்ற சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்திய பிரியா பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
முதல் அமைச்சர் பதக்கம் பெற்ற திருச்சி மாநகர போலீசாருக்கு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்திய பிரியா பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
சிறப்பாக பணியாற்றிய காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு அவர்களது 15 ஆண்டுகள் சிறப்பான மெச்சத்தகுந்த பணியை பாராட்டும் வகையில் முதலமைச்சரின் காவலர் பதக்கம் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் வழங்கப்பட்டுள்ளது. இதில் திருச்சியை சேர்ந்த 61 போலீசார் பதக்கம் பெற்றனர்.
இச்சிறப்பான பதக்கம் பெற்ற நபர்களை கௌரவிக்கும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா 5 சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் 55 தலைமை காவலர்கள் என முதலமைச்சர் காவல் பதக்கம் பெற்ற மொத்தம் 61 காவல் ஆளிநர்களை இன்று(15.02.23)-ந்தேதி நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
இச்சான்றினை வழங்கி உரையாடிய மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியாக பேசும்போது முதலமைச்சரின் காவலர் பதக்கம் பெற்ற காவல் ஆளிநர்களுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தும், எதிர்வரும் காலங்களில் தங்களது பணி மென்மேலும் சிறப்புடன் செய்து திருச்சி மாநகர பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளித்தும், தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில் காவல் ஆளிநர்கள் நடந்து கொள்ளும்படி தக்க அறிவுரை வழங்கினார்.
திருச்சி மாநகரத்தில், சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கவும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், கெட்டநடத்தைக்காரர்கள், வழிப்பறி குற்றவாளிகள் மற்றும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது உரிய, சட்டரீதியான, கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்து உள்ளார்.