திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு

திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-06-20 12:38 GMT

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மு. பரஞ்சோதி பேசினார்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தில்லை நகரில் நடந்தது.மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்சோதி தலைமை தாங்கினார். மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் என்.ஆர். சிவபதி,கழக அமைப்புச் செயலாளர் வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அவைத் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. பிரின்ஸ்தங்கவேல், முன்னாள் எம்.எல்.ஏ. இந்திரா காந்தி, ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார்,பகுதி செயலாளர்கள் சுந்தராஜ் டைமன் திருப்பதி, பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

பின்னர் கட்சியில் எழுந்துள்ள ஒற்றை தலைமை விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.இதில் ஒற்றை தலைமையால் மட்டும்தான் திமுக ஆட்சியை வீழ்த்தி மீண்டும் மக்கள் விரும்பும் அம்மாவின் ஆட்சியை கொண்டு வர முடியும். அதற்கு திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க.வின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் அனைத்து தொண்டர்களும் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிச்சாமியை ஆதரிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சேவியர், பொதுக்குழு உறுப்பினர்கள் மல்லிகா சின்னசாமி, ஜெயராம், சரோஜா இளங்கோவன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜாத்தி தியாகராஜன் மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News