திருச்சி மகிளா கோர்ட் கூடுதல் நடுவரை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி மகிளா கோர்ட் கூடுதல் நடுவரை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-03-16 11:53 GMT

திருச்சியில் நீதிபதியின் நடவடிக்கைகளை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ளது கூடுதல் மகிளா நீதிமன்றம். இந்த கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் மணிவாசகன் நடுவராக உள்ளார்.

நடுவர் மணிவாசகன் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களில் ஈடுபடுவதாகவும், கிண்டல் கேலிகள் செய்து பெண்களிடம் பேசுவதாகவும் இவரின் வன்முறை நடவடிக்கை மற்றும் சட்டத்திற்கு எதிரான போக்குகளை கண்டித்து அவரை பணியிடை நீக்கம் செய்து விசாரணை நடத்த கோரி திருச்சி வழக்கறிஞர்கள் திருச்சி மாவட்ட நீதிதிமன்ற நுழைவு வாயில் முன்பாக இன்று  ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Tags:    

Similar News