திருச்சி வன சரகர் பணியிடை நீக்கம்

திருச்சியில் பல்வேறு புகார் எதிரொலியாக திருச்சி வன சரகர் சஸ்பெண்ட்.

Update: 2021-11-11 04:00 GMT

திருச்சி வன சரகராக பணிபுரிந்து வந்தவர் குணசேகரன். இவர் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வந்தன. இந்த நிலையில் அதிகாரி குணசேகரனை சஸ்பெண்ட் செய்து திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் என்.சதீஷ் நேற்று உத்தரவிட்டார்.

நிர்வாக காரணங்களுக்காக குணசேகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினாலும். தீபாவளி வசூல் மற்றும் பாலியல் புகார்களின் அடிப்படையிலேயே அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக திருச்சி வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags:    

Similar News