ஓய்வூதியர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய வேண்டுகோள்

ஓய்வூதியர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-09-16 16:01 GMT

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்.

திருச்சிமாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வெளியிட்டு உள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சி மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் ஓய்வூதியம்  ஓய்வூதியதாரர்களில் 2022ம் ஆண்டு நேர்காணலை இதுவரை  செய்யாத ஓய்வூதியதாரர்கள் தங்களது வருடாந்திர நேர்காணலை மாவட்ட கருவூலம் அல்லது சார்நிலைக்கருவூலங்களில் உடனடியாக செய்து முடித்து ஓய்வூதிய நிறுத்தத்தை தவிர்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News