பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கினார் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் மேயர் அன்பழகன் பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கினார்.

Update: 2022-09-12 07:20 GMT

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார்.

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று காலை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. மேயர் மு. அன்பழகன் மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் துணைமேயர் திவ்யா, மாநகராட்சி ,நகரப் பொறியாளர்  சிவபாதம், மண்டலக்குழுத் தலைவர்கள் துர்காதேவி , விஜயலட்சுமி கண்ணன், ஜெயநிர்மலா மற்றும் மாநகராட்சி உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News