திருச்சி விமான நிலையத்தில் ரூ.12½ லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.12½ லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-01-09 05:17 GMT

திருச்சி விமான நிலையத்துக்கு  சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த ராஜகருப்பன் (வயது 59) என்பவர் ரூ.12½ லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News