திருச்சியில் தனிமையில் இருந்த வியாபாரி விஷம் குடித்து தற்கொலை

விஷம் குடித்து வியாபாரி தற்கொலை

Update: 2021-12-15 14:35 GMT

திருச்சி புத்தூர் ரெங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 62). இவர் கோட்டை பாபு ரோடு பகுதியில் பழைய பேப்பர் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்கள் வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் இவர் தனிமையில் இருந்தார். நேற்று மாலையில் அவர் வீட்டில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News