திருச்சி விமான நிலையத்தில் 2 கிலோ கடத்தல் தங்கம் தொடர்பாக மூவர் கைது

திருச்சி விமான நிலையத்தில் 2 கிலோ கடத்தல் தங்கம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-05-13 11:24 GMT

திருச்சி விமான நிலையத்திற்கு துபாய் மற்றும் சார்ஜா ஆகிய நாடுகளில் இருந்து விமானங்களில் வந்திறங்கிய 4 பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்பாது அவர்கள் லேப்டாப்பில்  மறைத்து  சுமார் இரண்டு கிலோ தங்கம் கடத்தி கொண்டு  வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ஒரு கோடியே 28 லட்சமாகும். இதனையொட்டி அவர்கள் மூவரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News