அரசு போக்குவரத்து கழக உதவி பொறியாளரின் வயர்லெஸ் மைக் செட் திருட்டு
அரசு போக்குவரத்து கழக உதவி பொறியாளரின் வயர்லெஸ் மைக் செட் திருட்டு போனது. போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.
திருச்சி அரசு போக்குவரத்து கழக குடந்தை கோட்டத்தில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வருபவர் முத்துக்குமார் (வயது 35). இவர் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் உள்ள விசாரணை அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது அவரது மேஜையில் இருந்த வயர்லெஸ் மைக் செட் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து உதவி பொறியாளர் முத்துக்குமார் கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜீ வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.