திருச்சி டீக்கடையில் பணம் கேட்டு ரகளை செய்த 2 ரவுடிகளுக்கு தர்ம அடி

திருச்சி டீக்கடையில் பணம் கேட்டு ரகளையில் ஈடுபட்ட 2 ரவுடிகளை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

Update: 2021-11-13 10:38 GMT
திருச்சி உறையூர் காவல் நிலையம் (பைல் படம்)

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராவ். இவர் திருச்சி-கரூர் பைபாஸ்ரோட்டில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு இவரதுகடைக்கு கஞ்சா போதையில் வந்த 2 வாலிபர்கள், கடையில் இருந்த கேசியரிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர்.அவர் பணம் கொடுக்க மறுக்கவே, ஆத்திரம் அடைந்த அவர்கள் கண்ணாடி பாட்டில்களை உடைத்து ரகளைசெய்துள்ளனர். இதைப்பார்த்த  அப்பகுதி பொதுமக்கள்,அவர்கள் 2 பேரையும் பிடித்துஅங்கிருந்த இரும்பு கம்பத்தில்கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.

இது குறித்து தகவலறிந்த உறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் ரகளையில்ஈடுபட்டவர்கள் மதுரை ரோடு நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடிகள் என்பதும்,அவர்கள் திருட்டு, வழிப்பறிவழக்கில் சம்பந்தப்பட்டுஇருப்பதும் தெரியவந்தது.இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணைநடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News