திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் மது பான கடைகள் 3 நாட்கள் மூடப்படுகிறது

திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் 3 நாட்கள் மூடப்படும் என கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார்.

Update: 2022-01-12 13:45 GMT

பைல் படம்.

திருச்சி மாவட்டத்தில் 15-ந் தேதி (திருவள்ளுவர் தினம்), 18-ந் தேதி (வள்ளலார் தினம்) மற்றும் 26-ந் தேதி (குடியரசு தினம்) ஆகிய 3 நாட்கள் அனைத்து சில்லரை மதுபான விற்பனை கடைகளும் மூடப்படுகிறது. மேலும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் (பார்) மூடப்படும். அத்துடன் எப். எல்.-1, எப்.எல்.-2, எப்.எல்.-3, எப்.எல்.-3ஏ, எப்.எல்.-3ஏஏஏ மற்றும் எப்.எல்.-11 பார்கள் அனைத்தும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும். மேலும் அன்றைய தினம் மதுபானங்கள் விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும். மீறினால் கடு மையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சு. சிவராசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News